Skip to main content

சேலம்: விஷம் கலந்த மதுவை விற்பனை செய்த பெண் குண்டாஸில் கைது!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 


சேலத்தில், அதிக போதைக்காக மதுபானங்களில் தடை செய்யப்பட்ட ரசாயனத்தை கலந்து விற்ற சந்துக்கடை பெண் சாராய வியாபாரியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

p


சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி பரிமளம் (50). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சில ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு, சந்துக்கடை மூலமாக சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.   அதன்பேரில் காவல்துறையினர் பரிமளா வீட்டிற்கு விசாரணைக்குச் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவருடைய வீடு மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவருடைய தோழி பழனியம்மாள் என்பவர் வீடு ஆகிய இரு இடங்களில் இருந்தும் 718 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 


கைப்பற்றப்பட்ட சில மதுபான பாட்டில்களில் விஷ நெடி அடித்ததால் அவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பினனர். இந்த பரிசோதனையில், மதுவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அட்ரோபின் ரசாயனம் கலந்து இருந்தது தெரிய வந்தது. 


இதையடுத்து தலைமறைவாக இருந்த பரிமளத்தை கடந்த 13.2.2019ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அதிக போதை தருவதற்காக அட்ரோபின் ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.


பரிமளா மீது ஏற்கனவே சூரமங்கலம் காவல்நிலையத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்ததாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவற்றில் நான்கு வழக்குகளில் அவர் அபராதம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்தது.


தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பரிமளாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சூரமங்களம் காவல்துறையினர், மாநகர துணை காவல் ஆணையர் தங்கதுரை ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதையடுத்து, மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் பரிமளாவை 'கள்ளச்சாராயக்காரர்' (பூட்லக்கர்) என்ற பிரிவின் கீழ் குண்டர் கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை கோவை பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.