Skip to main content

சேலம்: காய்கறிகள், ஆவின் பால் வீட்டுக்கே வரும்! வெளியே போக வேண்டாம்! தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

கரோனா நோய்த்தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. என்னதான், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் குறித்து தொடர் பரப்புகளை செய்தாலும்கூட, பொதுவெளியில் மக்கள் 100 சதவீதம் அவற்றை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதனாலும் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்களுக்காகக் கூட வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், குடியிருப்புகளை நோக்கி நடமாடும் காய்கறி கடைகள் செல்லும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதற்காக 80 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி கடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 20 நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. வீடு வீடாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இத்திட்டத்திற்கு கணிசமான வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து, மேலும் 50 நடமாடும் காய்கறி கடைகளும், தற்போது மேலும் 10 கடைகள் என மொத்தம் 80 நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


இந்த வாகனங்கள் இரண்டு விதமான சேவைகளை வழங்கும். அதன்படி, தினமும் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஆவின் முகவர்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கே நேரில் சென்று பால் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு 7.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இதே வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும். 
 

தச



பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் எளிதில் கிடைப்பதற்கு வசதியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களின் விவரங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும்.

 

sathish-corporation commissioner


சூரமங்கலம் மண்டலம் - 0427 2387514, 2387595

அஸ்தம்பட்டி மண்டலம் - 0427 2314646, 2310095

அம்மாபேட்டை மண்டலம் - 0427 2263161, 2250300

கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427 2461616, 2461111


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்து, வீடுகளுக்கே வரவழைத்துப் பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு ஆணையர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.