Skip to main content

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: 'ஆலையை பார்வையிட தனியாரை அனுமதிக்க மாட்டோம்'!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

தமிழகத்தில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பதற்கான உலகளவிலான ஒப்பந்தத்தை செயில் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. ஒப்பந்தம் எடுப்பதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரராததால், இதற்கான அவகாசத்தை மேலும் இருபது நாள்களுக்கு நீட்டித்துள்ளது செயில்.

 

SALEM STEEL PLANT SAIL EMPLOYEES STRIKE

 


இரும்பாலை தனியார்மயமாக்கலைக் கண்டித்தும், செயில் நிர்வாகத்திற்கு எதிராகவும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் இரும்பாலையை வாங்க விரும்பும் நிறுவனங்கள் ஆலை செயல்பாடுகளை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனத்தினர் எப்போது வேண்டுமானாலும் ஆலைக்குள் வரலாம் என்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், இரும்பாலை தொழிலாளர்கள் திங்கள்கிழமை (ஆக. 5) காலை முதல் ஆலையின் நுழைவு வாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

SALEM STEEL PLANT SAIL EMPLOYEES STRIKE

 


இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''தொழிலாளர்களின் பல்வேறுகட்ட போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் மத்திய பாஜக அரசு இந்த ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்க விரும்பும் நிறுவனத்தினர் இந்த ஆலையை பார்வையிட வருவதாக தகவல் கிடைத்தது. விலைக்கு வாங்கும் நோக்கத்தில் யார் வந்தாலும் ஆலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவோம். அதற்காகவே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.