சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள கார் ஷெட்டில் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
வெள்ளிப்பட்டறை உரிமையாளர் சுரேஷ் (22), அவரது காதலி ஜோதிகா (21) ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காதல் ஜோடியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன. மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.