Skip to main content

கடத்தப்பட்ட சிறுமி மீட்பு; சேலம் தம்பதி குடும்பத்துடன் கைது!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019


சேலத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை பட்டப்பகலில் கடத்திச்சென்ற தம்பதியினரை குடும்பத்துடன் காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. 

 

c

 

சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மே 22ம் தேதியன்று, வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் கழித்தும் குழந்தை வீட்டுக்குள் வராததால், வெளியே வந்து பார்த்தபோது குழந்தை மாயமாகி இருந்தாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பலரிடமும் விசாரித்தும் குழந்தை சென்ற இடம் தெரியவில்லை. இதனால், அருகில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கும்பல், குழந்தையைக் கடத்திச்சென்று இருப்பது தெரிய வந்தது.


இதுகுறித்து பாலாஜி செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பஞ்சலிங்கம் தலைமையில் காவல்துறையினர் குழந்தை கடத்தல் கும்பலை தேடினர். இதுகுறித்து பத்திரிகை, காட்சி ஊடகங்களிலும் செய்திகள், கடத்தல் புள்ளிகளின் படங்கள் வெளியானது மற்றும் காவல்துறையினரின் நெருக்கடி ஆகியவற்றை உணர்ந்த குழந்தை கடத்தல் கும்பல், கடத்திச்சென்ற குழந்தையை சேலத்தாம்பட்டி அருகே அனாதையாக விட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர், பாலாஜி தம்பதியிடம் ஒப்படைத்தனர்.


விசாரணையில், குழந்தையைக் கடத்தியது ரேவதி (31), அவருடைய கணவர் வேலவன் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களுடைய மகளுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 


கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதில் சிறப்பாகச் செயல்பட்ட அன்னதானப்பட்டி எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, செவ்வாய்பேட்டை எஸ்ஐக்கள் பூங்கொடி, மணி, காவலர் கோவிந்தம்மாள் ஆகியோரை மாநகர காவல்துறையினர் மற்றும் குழந்தையின் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை; கஞ்சா இளைஞருக்கு தர்மஅடி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
incident in aarani

அண்மையில் புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட முயன்று கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதே போன்று கஞ்சா இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல் வெளியான நிலையில் இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற அந்த இளைஞர் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அறிந்த அந்தபகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து கஞ்சா இளைஞர் இளங்கோவிடம் விசாரணை செய்த போலீசார் விசாரணையின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் நிகழ்ந்த இந்த சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.