Skip to main content

சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

சேலத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் அம்மாபேட்டை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் தனசேகரன் (32). பிரபல ரவுடி. அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு அவருடைய கடைக்குச் சென்ற தனசேகரன், அவருடைய கூட்டாளி ராகதேவன் ஆகியோர் பத்மநாபனிடம் கல்லாவில் இருக்கும் பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டினார். 


அவர் தர மறுக்கவே, கடையில் இருந்த சமையல் பாத்திரங்களை அடித்து நொறுக்கினார். அதை தடுக்க வந்த பத்மநாபன் மனைவியின் வயிற்றில் உதைத்துள்ளார். கடை ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததோடு, கல்லாவில் இருந்த 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், தனசேகரன், ராகதேவன் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். 

salem rowdy goondas act arreste police commissioner order


விசாரணையில், தனசேகரன் கூட்டாளி தன்ராஜ் என்பவருடன் சேர்ந்து, கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக 2016ல் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளியே வந்த தனசேகரன், சேலம் நஞ்சம்பட்டியில் கடந்த 2016ம் ஆண்டு சோமசுந்தரம் என்பவரிடம் கத்தி முனையில் 2000 ரூபாய் பறித்ததாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவை தவிர மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


 


இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை ஆணையர் தங்கதுரை, அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 


இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனசேகரனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கடந்த 19ம் தேதி காவல்துறையினர் சார்வு செய்தனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.