Skip to main content

சேலம் ரவுடி என்கவுண்ட்டர்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! உண்மை கண்டறியும் குழு அதிரடி!!

Published on 11/05/2019 | Edited on 12/05/2019

சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுண்ட்டர் வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 Salem Rowdy encounter: CBI must order investigation Truth Discovery Team Action!

 

சேலத்தை அடுத்த தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல். கொலை, மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர், மே 2ம் தேதியன்று காலை காரிப்பட்டி காவல்துறையினரால் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். 

 

இந்த என்கவுண்ட்டர் போலியானது என்று பல தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்தன. காவல்துறையினரே திட்டமிட்டு கதிர்வேலை கொன்றுவிட்டு, தாக்க முயற்சித்ததால் சுட்டுக்கொன்றோம் என்று கதை விடுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் தலைமையில் நீதி விசாரணை நடந்து வருகிறது. டிஎஸ்பி அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.

 

salem

 

இந்நிலையில், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், ஹரிபாபு, தமயந்தி ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் இடம், கதிர்வேலின் உறவினர்கள் ஆகியோரிடம் கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தினர். 


இதுகுறித்து அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

 

முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் ரவுடி கதிர்வேல் முன்கூட்டியே காவல்துறையில் சரண் அடைந்துள்ளார். மாநகர காவல்துறையினர் அவரை கைது செய்து, காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கதிர்வேலை, காவல்துறையினர் திட்டமிட்டு என்கவுண்ட்டர் செய்ததாக நாடகம் ஆடுகின்றனர். இந்த வழக்கை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளி வராது. கதிர்வேல் என்கவுண்ட்டரில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

 

 

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கதிர்வேலின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையானவர்கள். இதனால் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் நேரில் சென்று விசாரித்தோம். அங்கு வசிக்கும் நபர்கள், என்கவுண்ட்டர் சம்பவம் நடந்ததே தெரியாது என்கிறார்கள்.

 

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டிஎஸ்பி அண்ணாமலை, எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோரை சந்திக்க சென்றபோது அவர்கள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டனர். கதிர்வேல் தாக்கியதாக கூறப்பட்ட ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்ஐ மாரி ஆகியோரையும் விசாரிக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் சில ஆதாரங்களை திரட்டி உள்ளோம். இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மார்க்ஸ் கூறினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.