Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் ஒருவர் சிக்கினார்! 

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

சேலம் அருகே, மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 


சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சேலம் ஊரக டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கொலை நடப்பதற்கு முதல் நாள், திருச்செங்கோடை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும், அவருடைய நண்பர் ஒருவரும் மோகனை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையுண்ட மோகன், தனியாக ரியல் எஸ்டேட் தொழில் தொடங்குவதற்கு முன்பாக சுரேஷிடம் தான் வேலை செய்து வந்துள்ளார். இதனால் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். 

salem real estate incident police arrested


இதையடுத்து, சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. காவல்துறை நெருங்குவதை அறிந்த சுரேஷ் திடீரென்று தலைமறைவானார். இதனால் அவருடைய கூட்டாளிகளுக்கு வலை விரித்தனர். இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மாவீரன் என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மோகன் கொலையில் சுரேஷூக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 


கொலை நடந்த அன்று மோகனை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு சென்றுள்ளனர். பின்னர் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, குடிபோதையில் அவரை கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, சடலத்தை ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், மாவீரன் மட்டுமின்றி சேலம் மாநகரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

salem real estate business man incident police arrested





 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.