Skip to main content

சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்! வேலியே பயிரை மேய்ந்ததால் கமிஷனர் அதிரடி!!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 


சேலத்தில், மோசடி புகார்களை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐ முதல் ஏட்டுகள் வரையிலான 11 பேர் ஒரே நாளில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.


சேலம் மாநகர காவல்துறையில் நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு என்ற சிறப்புப்பிரிவு உள்ளது. இதர உள்ளூர் காவல்நிலையங்களைப் போல் அல்லாமல், இந்தப் பிரிவில் பெறப்படும் புகாரின்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் முன் துணை ஆணையர், ஆணையர் ஆகியோரின் அனுமதி பெறப்பட்ட பிறகே பதிவு செய்யப்படும். மத்தியக் குற்றப்பிரிவுக்கென்றே தனியாக காவல் உதவி ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு, நேரடியாக மேற்பார்வையிட்டு வருவார்.

 

 Transfer -




சேலத்தில், நகர காவல் நிலைய வளாகத்தில் மாநகர மத்தியக்குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில லட்சங்களுக்கு மேலான மோசடி நடந்த புகார்களை மத்திய குற்றப்பிரிவினரே விசாரிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பிரிவில் நிறைய மோசடி வழக்குகள் முடிவடையாமல் தேங்கிக் கிடந்தன. அதையடுத்து, முன்பு இருந்த காவல்துறை ஆணையர் சங்கர், மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதல் காவலர்களை நியமித்தார். அதையடுத்து, நீண்டகாலமாகத் தேங்கிக்கிடந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தற்போது 30 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருக்கின்றன.


இது ஒருபுறம் இருக்க, மோசடி வழக்குகளை விசாரிக்கும் சில காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், புகாரில் சிக்கிய நபர்களிடமே கூட்டு சேர்ந்து கொண்டு, கல்லா கட்டி வருவதாக நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் மூலமாக காவல்துறை ஆணையருக்குப் புகார்கள் சென்றன.


ஒரு பெரும் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாயை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், கணிசமான பகுதியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் உள்ள சிலர் பங்குபோட்டுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் பரபரப்பாக உலா வருகிறது. இந்த பரபரப்புக்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றி வந்த ஆய்வாளர் விஜயகுமாரி குறுகிய காலத்திலேயே அங்கிருந்து மாற்றப்பட்டார். 


 


இது ஒருபுறம் இருக்க, அடிக்கடி புகார்களில் அடிபட்டு வந்த தலைமைக் காவலர்கள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரையிலான 11 பேரை, ஒரே நாளில் தடாலடியாக இடமாற்றம் செய்து ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். 

 


அதன்படி, மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ கலைவாணி, எஸ்எஎஸ்ஐக்கள் கதிரேசன், பாஸ்கரன், முனவர் செரீப், குமாரலிங்கம், அர்த்தநாரீஸ்வரன், முருகேசன், தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், வெங்கடாசலம், சுந்தர், முரளிதுரை ஆகியோர் வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஓரிருவர் தவறு செய்யாதவர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவை நம்பி புகார் கொடுக்க வருகின்றனர். ஆனால் இங்குள்ள சிலரோ, குற்றவாளிகளிடமே பணம் வசூலித்துக்கொண்டு, அவர்களை தப்பிக்க விடுகின்றனர். அல்லது முன்ஜாமின் பெற திட்டம் வகுத்துக் கொடுக்கின்றனர். அதுபோன்ற ஒரு சிலரால், சில வழக்குகளில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. தற்போது புகாருக்குரிய நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.