Skip to main content

தனியார் பள்ளி ஆசிரியரிடம் போலீஸ் எஸ்ஐ 5 லட்சம் ரூபாய் நூதன மோசடி! துணை கமிஷனர் விசாரணை!!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 


சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் சேலம் 5 சாலை பகுதியில் உள்ள எஸ்ஆர்கே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாலை நேரங்களில் உமாசங்கரும் அவருடைய மனைவியும் வீட்டில் தனி வகுப்பும் நடத்தி வருகின்றனர்.

 

s


இவர்களிடம் சேலம் மரவனேரியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரின் மகன் கவுதம் தனிப்பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். அதன்மூலம் உமாசங்கருக்கும் ஆறுமுகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் உமாசங்கர் அவருடைய தங்கையின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதையறிந்த காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தனக்குத் தெரிந்தவர்கள் தங்க காசுகள் வைத்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து குறைவான விலைக்கு தங்க காசுகளை வாங்கிக்கொள்ளலாம். நகைக்கடையில் வாங்கினால் தேவையில்லாமல் வரித்தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். திருமணத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


இதை நம்பிய உமாசங்கர், தனக்கு தெரிந்தவர்களிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி வைத்திருந்தார். இதையடுத்து ஆறுமுகம், கடந்த மே மாதம் இந்த பணத்தை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கொண்டு வந்து அங்கு வரும் ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு, தங்க காசுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று உமாசங்கரிடம் கூறியுள்ளார். அதன்படி உமாசங்கரும், அவருடைய தாயாரும் பள்ளிபாளையம் சென்று ஆறுமுகம் குறிப்பிட்ட இடத்தில் நின்றனர்.


அப்போது வாலிபர் ஒருவர் வந்து, காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வைத்தார் என்று கூறினார். மேலும், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர், அவர்களிடம் தங்க காசுகள் இருப்பதாக ஒரு பையைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது அந்த இடத்திற்கு வந்த சில வாலிபர்கள், யார் நீங்கள் இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? கையில் வைத்திருக்கும் பணம் யாருடையது? நீங்கள் கையில் வைத்திருக்கும் பையில் என்ன இருக்கிறது? என்று விசாரித்தார்கள். இதற்கிடையே, ஆறுமுகம் அனுப்பியதாக வந்த மர்ம நபர், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோடி விட்டார். பிறகுதான் உமாசங்கர், தன்னிடம் பணம் வாங்கிய மர்ம நபரும், மிரட்டிய நபர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதையும், ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.


இதுகுறித்து உமாசங்கர், காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கூறினார். அதற்கு ஆறுமுகம், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. உங்களை யாரோ ஏமாற்றி உள்ளார்கள் என்றும், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். பின்னர் உமாசங்கரும், அவருடைய தாயாரும் சேலம் வந்து, ஆறுமுகத்திடம் நடந்ததை மீண்டும் கூறினர். அப்போது ஆறுமுகம் அவர்களை மிரட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளார். 


இதையடுத்து உமாசங்கர், வழக்கறிஞருடன் சென்று சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் திங்கள் கிழமை (ஜூன் 10) புகார் அளித்தார். தன் மகளுக்கு வரும் 19ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், ஆறுமுகத்திடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துணை ஆணையர் தங்கதுரை நேரடியாக விசாரித்து வருகிறார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.