Advertisment

காதலிக்க மறுத்ததால் சிறுமியிடம் பாலியல் சீண்டல்; சேலம் வாலிபர் போக்சோவில் சிக்கினார்!

police

Advertisment

சேலத்தில், காதலிக்க மறுத்த பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாத்திரக்கடை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் குகையைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த நான்கு மாதமாக மாணவியை பஞ்சந்தாங்கி ஏரிக்கரை இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து (26) என்ற வாலிபர் பின்தொடர்ந்து காதல் வலை வீசியுள்ளார். மாரிமுத்துவின் காதல் வலையில் சிறுமி லாவண்யா சிக்கவில்லை. இந்த நிலையில் மே 4ம் தேதி, சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தபோது அவளை பின்தொடர்ந்து சென்று, தோள் மீது கை போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அவனிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுமி, நடந்த சம்பவங்களை தன் பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். விசாரணையில் மாரிமுத்து, பாத்திரக்கடையில் வேலை செய்து வருவதும், சிறுமி காதலிக்க மறுத்ததால் அவளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

POCSO police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe