Skip to main content

குட்கா, புகையிலை பொருள்கள் கூரியர் சர்வீஸ் மூலம் கடத்தல்! 

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து கூரியர் சர்வீஸ் மூலம் நூதனமுறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய கும்பல் தலைவன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்தப் பொருள்களை விற்பதும், பதுக்கி வைத்திருப்பதும் கிரிமினல் குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய இரு துறைகளிலும் வழக்குப்பதிவு செய்யப்படும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறிப்பாக சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் சொகுசு பேருந்துகள் மூலம் புகையிலை பொருள்கள் கடத்தி வரும் கும்பல் ஒடுக்கப்பட்டனர்.

salem parcel office police search ilegal products seizure


இந்நிலையில், அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யும் கும்பல், கூரியர் சர்வீஸ் மூலம் நூதன முறையில் கடத்தலை தொடங்கி உள்ளனர். சேலம் கந்தம்பட்டி சித்தர் கோயில் சாலையில் செயல்பட்டு வரும் ஃபெடக்ஸ் எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்தில் புகையிலை பொருள் பார்சல்கள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டு உள்ளதாக சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த முகேஷ் என்பவரிடம் இருந்து சேலம் கிச்சிப்பாளையம் ஜலால்புரா அதியமான் தெருவை சேர்ந்த அப்துல் சலாம் சித்திக் என்பவர் பெயருக்கு 21 பார்சல்களும், அதே நபரிடம் இருந்து நெத்திமேடு புதூர் இட்டேரி சாலையைச் சேர்ந்த ரேகா எஸ் இண்டஸ்ட்ரீஸ் பெயருக்கு 2 பார்சல்களும் வந்திருப்பதும் தெரியவந்தது. 

salem parcel office police search ilegal products seizure


இதையடுத்து, அந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்திற்கு வந்திருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை தருவித்து, உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்ததாக அப்துல் சலாம் சித்திக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அஜ்மல், ஆரிப், அன்வர்பாஷா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சித்திக்கின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அங்கிருந்து 4 லட்சம் ரூபாய் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 30 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ புகையிலை பொருள்கள் சித்திக் வீட்டில் இருந்தன. 


சோதனை நடந்த வீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சித்திக் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இதற்கு முன்னரும் அவர் தொடர்ந்து சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை கடத்தி வந்து உள்ளூர் கடைகளுக்கு விநியோகம் செய்தாரா? காவல்துறையினர் தெரிந்தே கண்டும் காணாமலும் இருந்தனரா? என்ற கேள்விகளும் காவல்துறை வட்டாரத்திலேயே எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, சித்திக் உள்ளிட்ட நால்வர் மீதும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.