சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார்.
சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 9, 10, 11 ஆகிய கோட்டங்களில் வீடுகள், சாலையோரக் கடைகளுக்குச் சென்று நேற்று (18.03.2021) வாக்கு சேகரித்தார்.
தில்லைநகர், பெண்டம் ராமசாமி தெரு, சிங்காரப்பேட்டை, வாசகசாலை தெரு, தண்ணீர் தொட்டி, வடக்கு ரயில்வே லைன் தெரு, புத்துமாரியம்மன் கோயில் தெரு, அண்ணா நகர், தாண்டவன் நகர், அல்லிக்குட்டை, தாதம்பட்டி, வள்ளுவர் நகர், சத்யா நகர், வெங்கடாஜலம் காலனி, மன்னார்பாளையம் பிரிவு சாலை, வாய்க்கால் பட்டறை, கொய்யா தோப்பு ஆகிய பகுதிகளில் வேட்பாளர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் ராஜேந்திரனுக்கு பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பளித்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், துணைச் செயலாளர் ரகுபதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பூபதி, அமான், குபேந்திரன், மாநகரச் செயலாளர் ஜெயகுமார், அவைத்தலைவர் முருகன், பகுதிச் செயலாளர்கள் கேபிள் ராஜா, மணல்மேடு மோகன், காங்கிரஸ் கட்சி மாநகர தலைவர் ஜெயபிரகாஷ், கோட்ட செயலாளர்கள் வடிவேல், குணசேகரன், கோபால், தொமுச கவுன்சில் தலைவர் மணி உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக திமுக தேர்தல் அறிக்கை குறித்த துண்டறிக்கைகள் கொடுத்து பரப்புரையில் ஈடுபட்டனர்.