Skip to main content

கட்டுக் கட்டாக பணத்துடன் சிக்கிய முதியவர்; வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

salem new bus stand old man money bag incident 

 

சேலத்தில் கட்டுக் கட்டாக 62 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட முதியவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

 

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 25ம் தேதி பகலில், பள்ளப்பட்டி காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் கையில் ஒரு கனமான பையை தூக்க முடியாமல் தூக்கி வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கொண்டு வந்த பையை வாங்கி பார்த்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் எண்ணிப் பார்த்தபோது 62 லட்ச ரூபாய் இருந்தது. அனைத்தும் 500 ரூபாய் தாள்களாக இருந்தன.

 

விசாரணையில், அந்த முதியவர் பெயர் பாலகிருஷ்ணன் (வயது 59) என்பதும், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காவல்துறை உதவி ஆணையர் சரவணகுமார், ஆய்வாளர் ராணி ஆகியோர் விசாரித்தபோது, நகைக்கடைகளில் கொடுக்கும் நகைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகளை மொத்தமாக விற்பனை செய்து வருவதாகவும், நகை கடைக்காரர்களிடம் நகைக்குரிய  பணத்தை வசூலித்து கொடுத்தால் கமிஷன் கிடைக்கும். அவ்வாறு நகைகளை விற்றதன் மூலமும், கமிஷன் பணத்தையும்தான் எடுத்து வந்ததாகச் சொன்னார்.

 

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சேலத்தில் புதிதாக ஒரு நிலத்தை பத்திரப் பதிவு செய்வதற்காக பணத்தைக் கொண்டு வந்ததாகவும் கூறினார். எனினும், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உண்டான ரசீதுகளோ, நகை ஆர்டர் கொடுத்த கடை விவரங்களோ ஏதும் இல்லை. ஒருவேளை, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்படும் பணமாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். முதியவரின் முரணான தகவல்களால் குழம்பிப்போன காவல்துறையினர், இது தொடர்பாக சேலம் மண்டல வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜாராம், ஆய்வாளர் தங்கபாலன் ஆகியோரிடம் முதியவர் பாலகிருஷ்ணனையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் ஒப்படைத்தனர். அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.