salem new bus stand old man money bag incident 

சேலத்தில்கட்டுக்கட்டாக62லட்சரூபாய்பணத்துடன்பிடிபட்டமுதியவர்முன்னுக்குப் பின்முரணாகப் பேசியதால்வருமான வரித்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.

Advertisment

சேலம்புதியபேருந்துநிலையத்தில் கடந்த 25ம்தேதிபகலில், பள்ளப்பட்டிகாவல் நிலையகாவலர்கள் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டு இருந்தனர். அப்போது,முதியவர்ஒருவர்கையில் ஒருகனமான பையை தூக்கமுடியாமல் தூக்கிவந்துகொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்தமுதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அவர்முன்னுக்குப்பின்முரணாகப்பேசியதால் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர்கொண்டுவந்தபையைவாங்கி பார்த்தபோது,அதற்குள்கட்டுக்கட்டாக பணம்இருப்பதுதெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் எண்ணிப்பார்த்தபோது 62லட்சரூபாய் இருந்தது. அனைத்தும்500ரூபாய்தாள்களாகஇருந்தன.

Advertisment

விசாரணையில், அந்தமுதியவர்பெயர்பாலகிருஷ்ணன்(வயது 59)என்பதும்,ஈரோடுமாவட்டம் குமலன்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காவல்துறைஉதவிஆணையர் சரவணகுமார், ஆய்வாளர்ராணிஆகியோர் விசாரித்தபோது, நகைக்கடைகளில் கொடுக்கும் நகைகளுக்கு ஆர்டரின் பேரில்நகைகளை மொத்தமாகவிற்பனைசெய்துவருவதாகவும், நகை கடைக்காரர்களிடம் நகைக்குரிய பணத்தை வசூலித்துகொடுத்தால்கமிஷன் கிடைக்கும். அவ்வாறு நகைகளை விற்றதன்மூலமும்,கமிஷன்பணத்தையும்தான் எடுத்து வந்ததாகச் சொன்னார்.

ரியல்எஸ்டேட்தொழில்செய்துவருவதாகவும்,சேலத்தில்புதிதாகஒருநிலத்தைபத்திரப் பதிவு செய்வதற்காக பணத்தைக்கொண்டு வந்ததாகவும் கூறினார். எனினும்,அவர் கொண்டுவந்த பணத்திற்கு உண்டானரசீதுகளோ, நகைஆர்டர்கொடுத்தகடை விவரங்களோ ஏதும்இல்லை. ஒருவேளை, ஈரோடு கிழக்குதொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்காகவாக்காளர்களுக்கு பட்டுவாடாசெய்வதற்காக கொண்டு செல்லப்படும் பணமாகஇருக்கலாம் என்றும்காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். முதியவரின் முரணான தகவல்களால் குழம்பிப்போன காவல்துறையினர், இதுதொடர்பாக சேலம் மண்டலவருமான வரித்துறைக்குதகவல்அளித்தனர். வருமான வரித்துறை உதவிஆணையர் ராஜாராம், ஆய்வாளர் தங்கபாலன் ஆகியோரிடம்முதியவர் பாலகிருஷ்ணனையும்,அவர்கொண்டுவந்த பணத்தையும் ஒப்படைத்தனர். அவர்கள் மேற்கொண்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.