Skip to main content

சிறுமி கொலை வழக்கு: பாமக பிரமுகர் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள்! சேலம் நீதிமன்றம் தீர்ப்பு!!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 


வாழப்பாடி அருகே, பத்து வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

m


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி உள்பட மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி இரவு பரமசிவம் அவருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பரமசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பூங்கொடியை கடத்திச்சென்றது. அவர்களின் வீட்டுக்கு அப்போது கதவு இல்லாததால், அந்த கும்பல் வீடு புகுந்ததை தூக்கத்தில் இருந்த அவர்களால் உணர முடியவில்லை. 


சிறுமி கூச்சல் போடாமல் இருக்க, அவளுடைய வாயில் துணியை வைத்து அடைத்த அந்த கும்பல், அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைப்பகுதிக்குச் கடத்திச்சென்றது. அந்த கும்பல் குடி போதையி, சிறுமியை துடிதுடிக்க பாலியல் வன்புணர்வு செய்தனர். இதில் பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானாள். பிறகு, அந்த கும்பல் சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பிச்சென்றது.


தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்த பூபதி, ஸ்னேக் பாபு என்கிற ஆனந்த் பாபு, ஆனந்த், பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.


இவர்களில் பூபதி, அப்போது சென்றாயம்பாளையத்தில் பாமக தரப்பில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாமக தலைமை பூபதியை கட்சியைவிட்டு அதிரடியாக நீக்கியது. 


சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், சிறுமியை இழந்த குடும்பத்தினருக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்போது பல்வேறு அமைப்புகள் போராடின. இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் தனசேகரன் ஆஜராகி வாதாடினார்.


இந்நிலையில், சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 19, 2019) தீர்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, மகளிர் நீதிமன்றத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. பிணையில் இருந்த குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 


மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, இந்த வழக்கில் நீங்கள் ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது என்று தடாலடியாக கூறினார். பின்னர் அவர், ''இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்பினால் கூறலாம் என குற்றவாளிகளுக்கு பேச வாய்ப்பு அளித்தார். அப்போது பூபதி உள்ளிட்ட ஐந்து பேரும், இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. காவல்துறையினர் எங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்து சிக்க வைத்துள்ளனர். நாங்கள் நிரபாரதிகள்,'' என்று கூறினர்.


இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜயகுமாரி, வரும் 21.3.2019ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும், குற்றவாளிகளை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் ஐவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.