Skip to main content

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி! அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

சேலம் தென்அழகாபுரம் குடிநீர் வாரிய காலனியைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் அஸ்பர். இவர் கிரிஸ் டிசைன் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார். 

 

Salem Money matters - AIADMK Personality arrested

 



அந்த மனுவில், ''சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ஸ்ரீமகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அத்துடன், பங்குச்சந்தை வணிகத்திலும் ஈடுபட்டு வந்தார். அவர் என்னிடம், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். 

அதை நம்பி முதல்கட்டமாக அவரிடம் 5 லட்சம் ரூபாயை கொடுத்தேன். மேலும், என்னுடைய நண்பர்கள், உறவினர்களிடம் வசூலித்த ஒரு கோடி ரூபாயையும் அவரிடம் கொடுத்து இருந்தேன். ஆனால் அவர் அத்தொகைக்கு வட்டியாக இதுவரை 5 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். பலமுறை கேட்டும், அவர் வட்டியோ, என்னுடைய அசல் தொகையையோ கொடுக்கவில்லை.

இந்நிலையில், ரவிக்குமாரின் மனைவி கந்தலட்சுமி (35), அவருடைய தம்பி பாலமணிகண்டன், அஸ்தம்பட்டி அய்யர் சாலையைச் சேர்ந்த அங்கமுத்து மகன் குருதர்மன் (59), கோவையைச் சேர்ந்த அவருடைய நண்பர் மணிகண்டன் ஆகியோர், பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, நகைக்கடை உரிமையாளர் ரவிக்குமார் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த ரவிக்குமாரும், அவருடைய மனைவியும் நகைக்கடையை மூடிவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டனர். வியாழக்கிழமை (மார்ச் 19), கஜலட்சுமி, குருதர்மன் ஆகிய இருவரும் ஓரிடத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட குருதர்மன், அதிமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இந்த புகார் தொடர்பாக மேலும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரவிக்குமார் மீது மேலும் பலர் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.