மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு. கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. தற்போது வரை அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. அதே போல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 85 அடியை எட்டியது.

Advertisment

SALEM METTUR DAM AGRICULTURE PURPOSE WATER OPENING TN GOVT ANNOUNCED

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்டா பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவிப்பு. மேட்டூர் அணையின் முழ கொள்ளளவு 120 அடி ஆகும். நாளை மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.