Skip to main content

ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த அம்மன் பக்தர்கள்! சேலத்தில் களைகட்டிய மயான கொள்ளை விழா!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

சேலத்தில் ஆண்டுதோறும் மாசி அமாவாசையையொட்டி நடைபெறும் மயானக்கொள்ளை விழா, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.

 

Salem Mayanakkollai festival

 



இதையொட்டி அம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் மயானக் கொள்ளையன்று, அம்மன் போலவே வேடமணிந்து, அருள் வந்த நிலையில் ஆடியபடியே வீதி ஊர்வலமாகச் செல்கின்றனர். அப்போது மற்ற பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் ஆடு, கோழிகளை கடித்து ரத்தத்தைக் குடித்தபடி ஊர்வலமாக வருவர்.

மயானக்கொள்ளை நிகழ்ச்சி, இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மன் வேடமிடும் பக்தர்கள், மாசி அமாவாசைக்கு முதல் நாளன்று, குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதாவது, இத்தனை நாளாக விரதம் இருந்த பக்தர்கள் அன்றுடன் வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். கிச்சிப்பாளையம், நாராயண நகர், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பம்பை மேளத்துடன் கடவுள் வேடமணிந்து புறப்பட்ட பக்தர்கள், வீதி வீதியாகச் சென்று யாசகம் பெற்றனர். பின்னர் அவர்கள் தேர்மண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 

 



இரண்டாம் நாளான இன்று (பிப். 23) பல்வேறு பகுதிகளில் இருந்து அங்காளம்மன் வேடமணிந்த பக்தர்கள், காக்காயன் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக வந்தனர். ஆடு, கோழிகளை கடித்து அதன் பச்சை ரத்தத்தைக் குடித்தபடி, காக்காயன் சுடுகாட்டிற்கு வந்தனர். விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக, குழந்தை பாக்கியம் இல்லாத இளம்பெண்கள் தரையில் படுத்திருக்க, அவர்களை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் தாண்டிச் சென்றால், அடுத்த ஆண்டுக்குள் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதனால் வழிநெடுக ஏராளமான பெண்கள் தரையில் படுத்து, அம்மனிடம் ஆசி பெற்றனர்.

இதேபோல் அம்மனிடம் ஆசி பெற்றால் திருமணத்தடை நீங்கும், குடும்பத்தில் நீண்ட நாள்களாக நிலவி வந்த பிரச்னைகள் நீங்கும், பேய்கள் விட்டு அகலும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்களும் அம்மனிடம் ஆசி பெற்றனர். மயானக் கொள்ளை விழாவையொட்டி, காக்காயன் சுடுகாட்டில் தங்கள் முன்னோர்களின் சமாதிகளை சுத்தப்படுத்தினர். அவர்களின் நினைவாக சமாதி முன்பு, இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு, பலகாரங்கள், பழங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர். சேலம்வாழ் மக்கள் இந்த விழாவை வெகுவாக பார்த்து ரசித்தனர்.

இது இப்படி இருக்க, வள்ளாள மகாராஜன் என்பவரின் மனைவியின் குடலை கிழித்து கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, மயானத்தை சூறையாடுவதால்தான் இந்நிகழ்ச்சிக்கு மயானக்கொள்ளை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.