Skip to main content

கொங்கணாபுரம் சந்தை அமர்க்களம்; 3.25 கோடிக்கு ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனை!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

கொங்கணாபுரம் ஞாயிறு சந்தையில் ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய்க்கு ஆடுகள், கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.


சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. இந்த சந்தை ஆடு, கோழிகளுக்கு பிரசித்தி பெற்றது. என்றாலும், காய்கறிகள், இதர மளிகை சாமான்களும் விற்பனைக்கு குவிக்கப்படும். 


இந்த சந்தைக்கு, சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகளை வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நேற்று (டிச. 15) நடந்த சந்தையில் 7000 ஆடுகள், 1200 பந்தய சேவல்கள், 1800 சாதாரண சேவல்கள், 92 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கொள்முதல் செய்வதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

salem Market place; 3.25 crore goats, chickens and vegetables sold peoples

இதில், பத்து கிலோ எடையுள்ள ஆடு 4800 ரூபாய் முதல் 5650 ரூபாய் வரையிலும், 20 கிலோ எடையுள்ள ஆடுகள் 9800 ரூபாய் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை ஆனது. 


வளர்ப்புக்கான ஆட்டுக்குட்டிகள் 700 முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. பந்தய சேவல்களுக்கு 900 முதல் 3500 ரூபாய் விலை கிடைத்தது. ஆடுகளை அவற்றின் எடை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பந்தய சேவல்களைப் பொருத்தவரை, அவற்றை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு திறனை சோதனை செய்கின்றனர். அதிக திறன் உள்ள சேவல்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதேநேரம், சாதாரண சேவல்கள் 100 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.


சின்ன வெங்காயம் கிலோ 80 & 110 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ 70 & 100 ரூபாய் வரையிலும் அளவு மற்றும் தரத்தைப் பொருத்து விற்பனை ஆனது. 27 கிலோ கொண்ட தக்காளி கிரேடுகள் 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆடு, கோழிகளுக்கு மட்டுமே பிரசித்தி பெற்ற கொங்கணாபுரம் சந்தையில், நேற்று காய்கறிகளை வாங்கவும் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். நேற்று ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.