Skip to main content

நோயாளியாக வந்தவர் கைதியாகச் சிறை சென்றார்! மருத்துவர்களை மிரட்டியதால் வந்த வினை!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

salem manipal hospital ambulance driver prison police


சேலத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர், மருத்துவர்களைக் கத்தி முனையில் மிரட்டிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.
 


சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு அதிகளவில் கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. வெளியிடங்களில் இருந்து சேலத்திற்குள் நுழைபவர்களுக்கு மாவட்ட எல்லையிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
 

 


இந்நிலையில், கடந்த மாதம் 25- ஆம் தேதி, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாதேஸ்வரன் (40) கரோனா தொற்று காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கருப்பூரில் உள்ள மணிப்பால் மருத்துவனையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தார். வெளி மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றதன் மூலம் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் மூன்று நாள்களுக்கு முன்பு, திடீரென்று பழம் அறுக்கும் கத்தியைக் காட்டி, தன்னை உடனடியாக மருத்துவமனையில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மிரட்டினார். இதனால் மிரண்டு போன மருத்துவர்கள், அவரிடம் சகஜமாக பேச்சுக்கொடுப்பது போல் பேசி, அவரிடம் இருந்த கத்தியைப் பறித்துக் கொண்டனர். அதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
 

http://onelink.to/nknapp


தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. பூரண குணமடைந்ததை அடுத்து, அவரை மருத்துவமனையில் இருந்து ஜூன் 4- ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். இதற்கிடையே, மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, உள்தங்கு மருத்துவ அலுவலர் கருணா, அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மாதேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். நோயிலிருந்து குணம் பெற்று வீடு திரும்ப தயாராக இருந்த நிலையில், அவரை காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.