Skip to main content

காதலிக்கு பிறந்தநாள் பரிசு மரணம்! சேலம் அருகே சோகம்!!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

சேலம் அஸ்தம்பட்டி கேகே நகரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய மகள் ஆர்த்தி (19). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.


திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அசோக் (25). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அசோக்கும், ஆர்த்தியும் காதலித்து வந்தனர். 


நேற்று (பிப். 13) ஆர்த்திக்கு பிறந்த நாள் என்பதால், அவர் தனது பிறந்த நாளை காதலனுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்திருந்தார். மறுநாள் (பிப். 14) காதலர் தினம் வருவதால், இரண்டு நாள்களும் பெங்களூருவில் காதலனுடன் தங்கியிருக்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

salem lovers driving in two wheeler incient police investigation

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது, தன்னுடைய பிறந்த நாள் பரிசாக தனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்குமாறு ஆர்த்தி கேட்க, அசோக்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி ஆர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவருக்கு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்ட அசோக், அவ்வப்போது வண்டியின் ஹேண்டில்பாரை பிடித்து மோட்டார் சைக்கிள் ஓட்ட பயற்சி அளித்தபடி சென்றார். 


தீவட்டிப்பட்டி அருகே சென்றபோது திடீரென்று ஆர்த்தி ஆர்வக்கோளாறில் வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார். மின்னல் வேகத்தில் வண்டி பறந்தது. ஒரு கட்டத்தில், நிலைதடுமாறிய ஆர்த்தி, திடீர் பிரேக் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில், ஆர்த்தி தூக்கி வீசப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் ஆர்த்தி சிக்கிக்கொண்டார். இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 


இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர், ஆர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியின் பிறந்த நாளன்று மரணம்தான் அவருக்கு பரிசாக அமைந்து விட்டதாகச் சொல்லி, அவருடைய பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.