Skip to main content

சேலம் நகைக்கடை அதிபர் 50 கோடி ரூபாய் மோசடி; டெபாசிட் தொகை, அடமான நகைகளுடன் கணவன், மனைவி ஓட்டம்! 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Salem jeweler scam worth Rs 50 crore; Deposit amount, husband and wife flow with mortgage jewelry!

 

சேலத்தில் நகை சீட்டு, டெபாசிட் திட்டங்கள் மூலம் 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு நகைக்கடை அதிபரும் அவருடைய மனைவியும் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் உள்ள அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவருடைய மனைவி லலிதா (வயது 38). இவர்கள், சேலம் ராஜகணபதி கோயில் அருகில் லலிதாம்பிகை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர். 

 

இந்த கடையில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் மட்டுமின்றி கவரிங் நகைகளும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாகவும், நகைகளாகவும் டெபாசிட் பெற்றுக்கொண்டு திடீரென்று கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். 

Salem jeweler scam worth Rs 50 crore; Deposit amount, husband and wife flow with mortgage jewelry!

இதையடுத்து முதலீட்டாளர்கள், அல்லிக்குட்டையில் உள்ள தங்கராஜின் வீடு மற்றும் பொன்னம்மாபேட்டை சக்தி நகரில் உள்ள அவருடைய மாமனார் தேவராஜ் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டனர். வியாழக்கிழமை (ஜன. 27) தேவராஜின் வீட்டை நூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும்படி கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். 

 

லலிதாம்பிகை நகைக்கடையில் நடந்த நூதன மோசடி குறித்து, அந்தக் கடையின் ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தோம். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  

 

தங்கராஜூம், அவருடைய மனைவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சேலம் நகரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்தக் கடையில் மூன்று வகைகளில் நூதனமாக மக்களிடம் நகை, பணத்தை சுருட்டி உள்ளனர். 

Salem jeweler scam worth Rs 50 crore; Deposit amount, husband and wife flow with mortgage jewelry!

நகை சீட்டு திட்டத்தில் முதலீட்டை பெறுவது, தங்க நகைகளை அடமானமாக பெற்று அதன் எடைக்கு எடை செய்கூலி, சேதாரமின்றி புதிய தங்க நகைகளை வழங்கும் திட்டம், நேரடியாக ரொக்கமாக டெபாசிட் செய்து அதற்கு மாதந்தோறும் கணிசமான வட்டியும், ஓராண்டு முடிவில் அசலையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் என மூன்று திட்டங்களை நடத்தி வந்திருக்கிறார் தங்கராஜ். 

 

சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு, சின்ன சேலம், ஏற்காடு, பேளூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கலெக்ஷன் செண்டர்களையும் திறந்துள்ளார். நகைச்சீட்டு, டெபாசிட் திட்டங்களில் வாடிக்கையாளர்களை பிடிக்க 45- க்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்கராஜ் பணிக்கு அமர்த்தி உள்ளார். 

 

இதுதவிர, இன்னொரு வகையிலும் மோசடி செய்திருக்கிறார் என்கிறார்கள். லலிதாம்பிகை கடைக்குத் தேவையான நகை ஐட்டங்களை சேலத்தைச் சேர்ந்த சில நகைப்பட்டறை அதிபர்கள், நகைக்கடை அதிபர்களிடம் கொள்முதல் செய்து வந்துள்ளார் தங்கராஜ். அந்த நகைகளுக்கு உண்டான நிகர எடையில் தங்கமாகவோ, அதன் மதிப்பிலான பணமோ ஒரு வாரத்திற்குள் செட்டில்மெண்ட் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் டீலர்கள். 

Salem jeweler scam worth Rs 50 crore; Deposit amount, husband and wife flow with mortgage jewelry!

அதிகபட்சம் 150 கிராம் வரையிலான நகைகளுக்கு மட்டும் கடன் நிலுவை வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளனர். அந்த நிலுவையையும் ஒரு வாரத்திற்குள் செட்டில்மெண்ட் செய்திட வேண்டும். ஆனால் டீலர்களுக்கும் கடந்த இரண்டு மாதமாக உரிய தங்கம் மற்றும் பணத்தை செட்டில்மெண்ட் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். 

 

இதனால் பொறுமை இழந்த டீலர்கள் சிலர், லலிதாம்பிகை நகைக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த தங்க நகை தரப்பரிசோதனை செய்யப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய தளவாடச் சாமான்களை தூக்கிச் சென்றுள்ளனர். 

 

சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா, அவருடைய கணவர் உதயகுமார் ஆகியோர் கூறுகையில், ''தங்கராஜ் எங்களுக்கு நெருக்கமான உறவினர். அவர் புதிதாக நகைக்கடை திறந்திருக்கிறேன். சில கணக்கு வழக்குகளுக்காக முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் நகைகளை டெபாசிட் செய்தால் பவுனுக்கு 600 ரூபாய் வீதம் மாதந்தோறும் போனசாக கொடுத்து விடுகிறேன் என்றார். ஓராண்டு கழித்து அந்த நகைகளை திருப்பி எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதே எடைக்கு புதிய நகைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றார். 

 

அதை நம்பி நானும் என் குடும்பத்தினரும் 40 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் அவரிடம் டெபாசிட் செய்தோம். போனசாக கொடுத்த தொகைக்கும் கூடுதல் போனஸ் தருவதாகச் சொல்லி அதையும் மறு டெபாசிட் செய்து கொண்டார். கடைசியில் எங்கள் நகைகளைக்கூட தராமல் ஏமாற்றி விட்டார்,'' என்றனர். 

Salem jeweler scam worth Rs 50 crore; Deposit amount, husband and wife flow with mortgage jewelry!

இதே கடையில் நவீன், துரைராஜ், கிரி ஆகியோர் தங்கராஜுக்கு வலதுகரம் போல செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களும் நிறைய பேரிடம் முதலீடுகளை திரட்டிக் கொடுத்துள்ளதால், தங்கராஜ் செய்த மோசடியால் தற்போது இவர்களும் தலைமறைவாகிவிட்டனர். 

 

இவர்களில் நவீன் என்பவரும் இதே நகைக்கடையில் 25 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக அவருடைய தந்தை கண்ணன், தாயார் உமா ஆகியோர் கூறினர். ''என் மகன் கல்யாணத்திற்காக சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த 25 லட்சத்தையும் பறிகொடுத்துட்டு நிக்கிறோம். அதுமட்டும் இல்லீங்க... என் மகனை கஸ்டமர்கள் மிரட்டுறாங்க. அவன் வீட்டுக்கு வந்தே மூணு நாளாச்சுங்க... என்ன ஆனானு தெரியல...,'' என கண்ணீர் மல்க கூறினார்.

 

கன்னங்குறிச்சியைச் சேர்ந்த தனபால், ''லலிதாம்பிகை ஜூவல்லரியில் நான் 12 லட்சம் ரூபாயும், எனது மைத்துனர் சுதர்சன் 13 லட்சம் ரூபாயும் முதலீடு செய்திருந்தோம். முதலீடு செய்த காலக்கட்டத்தில் லட்ச ரூபாய்க்கு 27 கிராம் தங்கமும், 2 லட்சம் ரூபாய்க்கு 45 கிராம் தங்கமும் தருவதாகச் சொன்னார். ஆனால் சொன்னபடி தங்கமும் தரவில்லை. பணமும் திருப்பித்தரவில்லை,'' என்றார். 

 

ரொக்கமாக டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மாதம் 4 முதல் 7 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்றும், ஓராண்டு முடிவில் டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி ஏராளமானோர் பணத்தை கொட்டியிருக்கிறார்கள். டெபாசிட் பெற்றதற்கான முத்திரைத்தாள் ஒப்பந்த பத்திரம் கூட தராமல், கடையின் பெயரை அச்சிட்ட சாதாரண பேப்பரில் ரசீது கொடுத்துள்ளார் தங்கராஜ். 

 

மோசடி மன்னன் தங்கராஜ், சில ஆண்டுக்கு முன்பு சேலத்தில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் வேலை செய்து வந்தார். அந்த நகைக்கடையும் சீட்டு திட்டங்களை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது. அதே ஃபார்முலாவை பின்பற்றியே தங்கராஜூம் தற்போது ஆசை வலை விரித்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 

 

தங்க நகைகளை டெபாசிட்டாக பெறும் தங்கராஜ், அவற்றை உடனடியாக உருக்கி கச்சா தங்கமாக மாற்றி விடுவாராம். அந்த தங்கக்கட்டிகளை முத்தூட், மணப்புரம், ஐஎல்எப் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து, குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார். 

 

இந்த கடையின் ஊழியர்கள் கூறுகையில், ''எங்களுக்கே கடந்த டிசம்பர் மாதம் சம்பளம் இன்னும் தராமல் ஏமாற்றிவிட்டு ஓடிப்போய்விட்டார். இங்கு சாதாரண சம்பளத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கூட இதே கடையில் அதிக போனஸ் தொகைக்கு ஆசைப்பட்டு நகைகளையும், பணத்தையும் முதலீடு செய்துள்ளனர். தற்போது எங்களுக்கும் தங்கராஜ் பட்டை நாமம் போட்டுவிட்டார். 

 

நாளுக்கு நாள் டீலர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நெருக்கடி வந்ததால் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று கடையைப் பூட்டிவிட்டு தங்கராஜூம், அவருடைய மனைவியும் தலைமறைவாகி விட்டனர். 

 

நகை சீட்டுத் திட்டத்தில் மட்டும் 3100 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுபோல தங்கம் டெபாசிட், ரொக்கம் டெபாசிட் திட்டங்களையும் கணக்கிட்டால் 40 கிலோவுக்கு மேல் தங்கம், பல கோடி ரூபாய் ரொக்கம் என 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டியிருக்கலாம். நெருக்கடி முற்றியதால் ஊழியர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் மூன்று நாள்களுக்கு கடை விடுமுறை என்று கடையின் ஷட்டர் முன்பு நோட்டீஸ் ஒட்டி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்,'' என்றனர். 

 

சேலம் லலிதாம்பிகை நகைக்கடை மோசடி குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறையில் ஏராளமானோர் புகார்களை கொடுத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.