Skip to main content

சேலம் சிறை வார்டனை கொன்றது ஏன்? கைதான 9 பேர் பரபரப்பு வாக்குமூலம்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

சேலம் மத்திய சிறையின் முன்னாள் வார்டனை வெட்டி கொலை செய்தது ஏன் என்று கைதான 9 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சேலம் சோளம்பள்ளம் அய்யம்பெருமாம்பட்டி புது சாலையைச் சேர்ந்தவர் மாதேஷ் (28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். ஜூலை 11ம் தேதி, ஆண்டிப்பட்டி பகுதியில் அவரை 9 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். 

 


இந்த கொலை தொடர்பாக சூரமங்கலத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் (35), அவருடைய கூட்டாளிகள் சாஸ்திரி நகர் அக்பர் பாஷா (37), தர்மன் நகர் பாரூக் (37), கல்யாணசுந்தரம் காலனியைச் சேர்ந்த செல்வம் (36), விக்ரம் (32), ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த குமார் (27), முல்லை நகர் ராஜேஷ் (35), தர்மன் நகர் சையத்பாஷா (36), கன்னங்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்த மாதேஷ் (36) ஆகிய ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான டேவிட்டிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலம்: 

 

 

 

Salem INCIDENT the prison warden Nine arrested POLICE INVESTIGATED

 

 


சிறை வார்டன் மாதேஷ் எனது தோழி கார்த்திகாவை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்தார். அவரை காதலிப்பதாகவும் சொன்னார். ஆனால் அவரை கார்த்திகாவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் படி மாதேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து கார்த்திகா என்னிடம் அழுது புலம்பினார். மாதேஷை கண்டித்து வைக்கும் படி சொன்னார். அதன் படி நானும் மாதேஷை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தேன். இந்நிலையில் தான் கார்த்திகா ஓட்டி வந்த ரியல் எஸ்டேட் அதிபர் செல்வத்திற்குச் சொந்தமான காருக்கு மாதேஷ் தீ வைத்தார். என் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காருக்கும் தீ வைத்தார். எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். கார்த்திகாவுக்காக எச்சரிக்கை விடுத்ததால் ஆத்திரத்தில் என் காரையும் அவர் எரித்ததால் மாதேஷ் மீது எனக்கு ஆத்திரம் உண்டானது.

 


இதற்கிடையே நான் அளித்த புகாரின் பேரில்தான் மாதேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் தான் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். நான் வேலை பார்த்த சிறையிலேயே என்னை தள்ளி விட்டாயே. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மாதேஷ் மிரட்டினார். இதுகுறித்து என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்களோ, மாதேஷை தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று யோசனை சொன்னார்கள். இதையடுத்து ஜூலை 10ம் தேதியன்று, மாதேஷூக்குச் சொந்தமான மீன் பண்ணைக்கு அருகே வைத்து அவருடைய கதையை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அன்று அவர் வரவில்லை. 

 

 

Salem INCIDENT the prison warden Nine arrested POLICE INVESTIGATED

 

 


இதையடுத்து மறுநாள் கூட்டாளிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் சென்று மாதேஷை கண்காணித்தோம். அவர் மீன் பண்ணைக்குச் சென்று விட்டு வெளியே வந்த போது வெட்டி கொலை செய்தோம். இவ்வாறு டேவிட் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். அவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.