Skip to main content

குடிபோதையில் தகராறு; பெரியப்பாவை கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

சேலத்தில், குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகன் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சரவணன் (40). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.


கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது தாயார் மாதம்மாளுடன் வசித்து வந்தார். சரவணனின் தம்பி முருகேசன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அவர், தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார். 


இதனால் முருகேசன், தனது மூத்த மகன் செல்வத்துடன் (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனி வீட்டில் வசிக்கிறார். சரவணன், முருகேசன், அவருடைய மகன் செல்வம் ஆகிய மூவரும் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

SALEM INCIDENT POLICE INVESTIGATION

                                                                                                           (சரவணன்)                

கடந்த சில நாள்களுக்கு முன், அண்ணன், தம்பிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சரவணன் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், தனது அண்ணன் சரவணனை தாக்கியுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து விலக்கி வைத்தனர்.


இந்நிலையில், சரவணன் நேற்று இரவு (அக். 13) மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தம்பி வீட்டில் அவருடைய மகன் செல்வம் (சிறுவன்) மட்டும் தனியாக இருந்துள்ளார். இதைப்பார்த்த சரவணன், அவரிடமும் தகராறில் ஈடுபட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், உருட்டுக்கட்டையால் தனது பெரியப்பா சரவணனை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சரவணன் மண்டை உடைந்து, நிகழ்விடத்திலேயே இறந்தார். 


இதுகுறித்து அப்பகுதியினர், சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரவணனை அடித்துக் கொன்றதாக பதினைந்து வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோரை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் சிறுவன் செல்வம், தனது பெரியப்பாவைக் கொன்று இருப்பது தெரிய வந்தது. குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகனே அடித்துக்கொன்ற நிகழ்வு, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.