Skip to main content

எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலில் மாந்திரீகவாதி தற்கொலை!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

 

salem incident police investigation

 

சேலம் அருகே, காவல்துறை எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலில் மாந்திரீகவாதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவர்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

 

சரவணன், அப்பகுதியில் மாந்தீரிகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அமாவாசை நாட்களில் இவரிடம் வரும் நோயாளிகளுக்கு மாந்திரீகம் செய்த தாயத்து, கயிறுகளை கட்டி விடுவது வழக்கம். இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து பல்வேறு நோய்கள் குணமாக வேண்டி தாயத்து, மந்திரித்த கயிறுகளை கட்டிச்செல்கின்றனர். 

 

கடந்த 14- ஆம் தேதி மாலை சரவணன், தனது வீட்டிற்கு வந்த பெண் ஒருவருக்கு தாயத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் காவலர்கள், சரவணனை அரை நிர்வாணத்தில் இருப்பதாகக்கூறி தாக்கியுள்ளனர். அதற்கு அடுத்த நாள் முதல் சரவணன் மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, அவருடைய செல்போனில் இருந்து நண்பர்களின் செல்போன் எண்களுக்கு ஒரு காணொலி பதிவு வந்தது. அதில் பேசிய சரவணன், ''என்னுடைய இந்த முடிவுக்கும், மன உளைச்சலுக்கும் எஸ்ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம். அவர் என்னை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்.

 

என்னுடைய இந்த கஷ்டமான முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. அதிகார தோரணையில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்தோணி மைக்கேல் அடித்தார். அத்தனை பேரையும் என்னுடைய ஆன்மா சும்மா விடாது. அப்பா உன்னிடம் வர்றேன்,'' என்று பதிவிட்டிருந்தார்.

 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நண்பர்கள் சரவணனை மீண்டும் தீவிரமாக தேடினர். இந்நிலையில், அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு இடையே சரவணன் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை (ஆக. 20) தெரிய வந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் காவல் ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

 

எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலால் மாந்திரீகம் செய்து வந்தவர், காணொளியில் வாக்குமூலம் அளித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.