Skip to main content

கஞ்சாவுக்காக 3 கொலைகள்! சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், சாலையோரம் கேட்பாரற்று தூங்கும் பிச்சைக்காரர்களை குறிவைத்து கொலை செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கியதாக, சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பயணிகள் நிழற்கூடம் அருகே பிப். 1ம் தேதி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அதற்கு அடுத்த நாள் (பிப். 2), திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.


இச்சம்பவத்திற்கு அடுத்த நாளான பிப். 3ம் தேதி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் ஒரு கடையின் வாசலில் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பழ வியாபாரி அங்கமுத்து என்ற முதியவர் கொல்லப்பட்டுக் கிடந்தார். 

salem incident police arrested one  person investigation

இந்த மூன்று கொலைகளுமே ஒரே மாதிரியாக நிகழ்த்தப்பட்டு இருந்தன. மூவருமே கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டிருந்தனர். அதனால் இச்சம்பவத்தின் பின்னணியில் ஒரே குற்றவாளிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் சேலம் மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.


மேலும், சில இடங்களில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை வைத்துப் பார்த்தபோது கொலையாளி, சற்று மனநிலை பாதித்தவர்போல காணப்பட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். ஒருகட்டத்தில், மூன்று கொலைகளையும் அவர்தான் செய்தார் என்பதை ஒப்புக்கொண்டார். 


இதையடுத்து, சிசிவிடி காட்சிகளில் இருப்பவரும், காவல்துறையின் பிடியில் இருப்பவரும் ஒருவர்தானா என்பதை புகைப்பட ஒப்பீட்டு ஆய்வுக்காக சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு படங்களை அனுப்பி வைத்தனர். இந்த இரு புகைப்படங்களும் ஒத்துப்போனது ஆய்வில் தெரிய வந்தது.


இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை (பிப். 22) கைது செய்தனர். அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தேரியூரைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவரின் மகன் ஆண்டிசாமி (19) என்பது தெரிய வந்தது. 


கொலையாளி காவல்துறையில் அளித்த வாக்குமூலம்: 


எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். எனக்கு ராமன் என்ற தம்பி இருக்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். அதனால் என் அம்மாதான் எங்கள் இருவரையும் வளர்த்தார். என் தம்பியும் கூலி வேலைக்குச் சென்று வந்தான். 


படிப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். தந்தை வேறு பெண்ணுடன் சென்று விட்டதால் மேற்கொண்டு படிக்க வசதி இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். 


அவர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைக்கவும் கற்றுக்கொண்டேன். கஞ்சா போதைக்கு அடிமையானதால் அது இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அடிக்கடி என் அம்மாவை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்று கஞ்சா அடித்திருக்கிறேன். 


போதைப்பழக்கத்தால் என் வீட்டையே தீ வைத்து எரித்திருக்கிறேன். அதைத் தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரையும் அடித்திருக்கிறேன். இதனால் ஊர் மக்கள் என்னைக் கண்டாலே எதிரியாக பார்க்கத் தொடங்கினர். 


இந்த நிலையிலும் ஏர்வாடிக்கு என்னை என் அம்மா, அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் ஊருக்குள் இருக்க விடாமல் மக்கள் என்னை விரட்டியதால், ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்தேன். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கஞ்சா அடித்தேன். 


இந்த நிலையில்தான், வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரரை கல்லால் தாக்கி கொலை செய்தேன். அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கி புகைத்தேன். பின்னர் சேலம் வந்தேன். பிச்சைக்காரர்கள், கேட்பாரற்று சாலையோரம் தூங்கும் முதியவர்களை அடித்துக் கொன்றுவிட்டு அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கினேன். போதைக்கு அடிமையானதால் இந்த கொலைகளைச் செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.