Skip to main content

தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; 3 ஆசிரியர்கள் கேரளாவில் பதுங்கல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

salem in incident

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனோகரன் பெற்றோருடன் உள்ளார். மற்ற இரு மகன்களும் வெளிநாட்டில் உள்ளனர்.

 

வீரகனூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நவீனன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மாதேஸ்வரிக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தனர். இதற்கிடையே, வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கித் தருமாறு மாதேஸ்வரி அவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, அவர்களுடன் பணியாற்றி வரும் மற்றொரு ஆசிரியர் சங்கர் ஆகியோர் வங்கியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, வங்கியில் கடன் பெற்றுக் கொடுத்ததற்காக சொத்து உத்தரவாதம் வேண்டும் என்று கூறி, மாதேஸ்வரிக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றி பதிவு செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கடன் அசல், வட்டி ஆகியவற்றை முறையாகச் செலுத்தி வந்த பிறகும் தன் வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதால், மாதேஸ்வரி விரக்தி அடைந்தார்.

 

தன்னுடைய வீட்டை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிக் கொடுத்து விடுமாறு பலமுறை அவர்களிடம் கேட்டுப் பார்த்தும் ஆசிரியர்கள் இறங்கி வரவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, சங்கர் ஆகியோர் மீது வீரகனூர் போலீசார் மாதேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, வங்கிக் கடனை மாதேஸ்வரி சரியாக செலுத்தவில்லை என்றும், கடனை செலுத்துமாறு கூறியபோதும் அவர் மறுத்ததால் அதற்கு உத்தரவாதமாக மாதேஸ்வரியை வீட்டை எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

 

இந்த மேலோட்டமான விசாரணையோடு நின்றுகொண்ட போலீசார், அவர்களைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு வந்ததால், வேதனை அடைந்த பெரியசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

 

கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தின் பின்னணியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் விசுவரூபம் எடுத்தது.

 

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினர். பணி நேரத்தில் வட்டித்தொழில் செய்து வந்ததாலும், அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாலும் உடனடியாக மூன்று ஆசிரியர்களையும் பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகே போலீசாரும் உஷார் ஆனார்கள். விவகாரம் வேறு திசையில் பயணிப்பதை உணர்ந்த அவர்கள், ஆசிரியர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் கேரளா மாநிலத்திற்குச் சென்று பதுங்கி விட்டதாக தெரிகிறது.

 

இதுகுறித்து வீரகனூர் காவல் ஆய்வாளர் முருகனிடம் கேட்டபோது, ''மாதேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தோம். 3 ஆசிரியர்களுக்கும் முன்ஜாமின் கொடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் எதிர்மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். இந்நிலையில்தான் அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.