Skip to main content

சேலத்தில் கொலை குற்ற ரவுடிகள் இருவருக்கு 'குண்டாஸ்'!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே குழு மோதல் ஏற்பட்டது. அப்போது, அபுபக்கர் என்ற வாலிபரை இருவர் அடித்துக் கொன்றனர். 


இதுகுறித்து விசாரித்த அம்மாபேட்டை காவல்துறையினர், சிவாஜி நகர் வித்யா மந்திர் பள்ளி அருகில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் பால்மணி என்கிற மணிகண்டன் (31), வித்யா நகர் 8- வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கோமதுரை மகன் மணிகண்டன் (23) மற்றும் இவர்களின் கூட்டாளிகள் கவுதம், தீபக் என்கிற அஜீத் ஆகியோரை கைது செய்தனர்.

salem illegal activities goondas act police arrested


இவர்களில் பால்மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 28.10.2019ம் தேதி, காமராஜர் நகர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சாபீர் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 


பால்மணியின் கூட்டாளியான மணிகண்டன் என்பவர், அதே நாளில் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் சுதாகர் என்கிற சுதா என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.  மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட பால்மணி, மணிகண்டன் ஆகிய இருவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 


கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததோடு அவர்கள் இருவரும் சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தார். 


அதன்பேரில், அவ்விரு ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆண்யைர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, பால்மணி, மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை, காவல்துறையினர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (டிச. 17) நேரில் சார்வு செய்தனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.