Skip to main content

நோயாளிகளிடம் வசூல் வேட்டை: சேலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் பணிநீக்கம்!

Published on 20/01/2019 | Edited on 21/01/2019

 

hospital

 

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

 


சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் காவல் பணிகள், ஆந்திராவைய் சேர்ந்த பத்மாவதி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மூலமாக 290 பெண்கள், 370 ஆண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு துறையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

 


இந்நிலையில் பிரசவ வார்டில் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்களில் சிலர், ஆண் கு-ழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய், நோயாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச்செல்ல 100 ரூபாய், சாப்பாடு டோக்கன் பெற்றுத்தர 50 ரூபாய் என பட்டியலிட்டு பணம் வசூலித்து வந்துள்ளனர்.

 

குறிப்பிட்ட சிலருக்கு ஒரே துறையில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளதும், ஒப்பந்த ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 


இந்நிலையில், அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) ராஜேந்திரன், ஒப்பந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கர நாயுடு, பாதுகாப்பு அலுவலர் கரிகாலன் ஆகியோர் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினர்.

 


அதில், ஒப்பந்த ஊழியர்கள் அண்ணாமலை, குப்பம்மாள், பழனியம்மாள், கவிதா ஆகியோர் நோயாளிகளிடம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நால்வரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

 


இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் ராஜேந்திரன் கூறுகையில், ''ஒப்பந்த ஊழியர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக  பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட மாட்டார்கள்,'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.