Skip to main content

லஞ்ச பணத்துடன் சிக்கிய பேரூராட்சிகள் உதவி இயக்குநர்!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020

 

salem government officer vigilance officers seizures money


சேலத்தில், 3.50 லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்துடன் பேரூராட்சிகள் உதவி இயக்குநரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (57). இவர், சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 53 பேரூராட்சிகளின் செலவினங்கள், நிர்வாகப்பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

 

பணி நிமித்தமாக, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை சொந்த ஊருக்கு காரில் செல்லும் அவர், திங்கள்கிழமை காலையில் மீண்டும் பணிக்கு திரும்பி விடுவது வழக்கம்.

 

பேரூராட்சிகளில் துப்புரவு, குடிநீர் குழாய் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு ஆகிய பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்கான செலவுத்தொகைக்கு உண்டான கோப்புகளில் இவர்தான் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் கொண்டு வரும் 'பில்' தொகையை அனுமதிக்க, அவர்களிடம் இருந்து தலா 5 சதவீத தொகையை லஞ்சமாக பெற்று வந்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. அவரை பொறி வைத்துப் பிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

இந்நிலையில்தான், வெள்ளிக்கிழமை (டிச.11) மாலை அவர் சொந்த ஊருக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலிக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், கனகராஜை பின்தொடர்ந்து சென்றனர். சேலத்தை அடுத்த அரியானூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த கனகராஜை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

 

அந்த காரில் சோதனையிட்டபோது, இரண்டு பைகளில் இருந்து கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்ததோடு, கனகராஜையும் உடனடியாக கைது செய்தனர். இதையடுத்து, சொந்த ஊரில் உள்ள அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டிச. 10- ஆம் தேதியன்று, சேலத்தில் முத்திரைத்தாள் பிரிவு துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட நிலையில், மறுநாளே இன்னொரு அரசு அதிகாரியும் லஞ்சப்பணத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.