Skip to main content

25 வயது பெண்ணை கொலையாளி மயக்கியது எப்படி? சேலம் கொலை சம்பவத்தில் பரபரப்பு பின்னணி!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சேலத்தில், குளிர்பான கடைக்குள் புகுந்து திருமணத்திற்கு மறுத்த 25 வயது இளம்பெண்ணை 55 வயது கொலையாளி கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 


சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் இனாமுல்லாஹ் (55). அப்பகுதியில் உள்ள ஆசாத் நகரைச் சேர்ந்த ஷெரீன் சித்தாரா பானு (25) என்பவரை வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 5, 2019) அவர் பணியாற்றி வந்த குளிர்பான கடைக்குள் புகுந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு அவரும் அதே கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

 


அவர் எழுதியிருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தில், இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் சித்தாராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அனுமதி கேட்டதற்கு அவர் மறுத்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். 

 

 


இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 


கொலையாளி இனாமுல்லாஹ், சூரமங்கலம் பகுதியில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினரிடையே முக்கிய பிரமுகராக இருந்து வந்துள்ளார். மேலும், அவர் பல ஆண்டுகளாக துபை, குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு முஸ்லிம் பெண்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தனக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருமாறு சித்தாரா பானு அவரை அணுகியுள்ளார்.

 

salem girl murder case Background


அவருடைய அழகில் மயங்கிய இனாமுல்லாஹ், சித்தாராவுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தராமல் தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் இனாமுல்லாஹ் அவர் மீது காதல் வசப்பட்டது தெரிய வந்துள்ளது. சித்தாராவும் அவரின் கனிவான பேச்சில் மயங்கியுள்ளார்.

 

 


இருவரும் நெருங்கிப்பழகுவது தெரிய வந்ததால், சித்தாராவின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். அதற்கான வேலைகளையும் இனாமுல்லாஹ்தான் முன்னின்று முடித்துக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இன்னும் நெருக்கமாகி, உடல் அளவிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் வரை சென்றுள்ளது.

 

salem girl murder case Background


இதனால் இனாமுல்லாஹின் மனைவியும் அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில்தான், சித்தாராவை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடர விரும்பிய இனாமுல்லாஹ் அவரின் சம்மதம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். திருமணத்திற்கு சித்தாரா சம்மதிக்காததால் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவும் முன்பே தீர்க்கமாக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 


சித்தாராவை கொலை செய்வதற்காகவே இனாமுல்லா, ஒரு கத்தியை கடையில் வாங்கியுள்ளார். அந்த கத்தியில் அவர் தனது பெயரை பொறித்துள்ளார். இதை வைத்துதான், சித்தாராவை தீர்த்துக்கட்ட இனாமுல்லாஹ் முன்பே முடிவு செய்திருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சித்தாராவுக்கு கடந்த மார்ச் 6ம் தேதியிட்டு இனாமுல்லாஹ் ஒரு கடிதம் எழுதியிருந்துள்ளார். 9 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

 

murder


சித்தாரா, நாம் இருவரும் இன்றைய நிலையில் வெறுத்து ஒதுங்கி கோபமாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கணக்கு வைத்துக்கொண்டாலும்கூட நாம் இருவரும் 150 தடவைக்கு மேல் உடலால் ஒன்று சேர்ந்துள்ளோம். 

 

 


இதை நம் இருவரின் குடும்பத்தாரும் மிக சாதாரணமாகக் கருதி ஒதுங்கிக்கொண்டாலும், நாம் செய்த பெரும் பாவத்தை அல்லாஹ் மறந்துவிடுவானா? அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நாம் மீள முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால், நம் இருவருக்கும் இந்த நிமிடம் வரை அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளான்.

 


சித்தாரா, உனக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நம்முடைய தவறான செயலால் ஏற்பட்ட பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்க, முதல் குற்றவாளியான நானும், இரண்டாவது குற்றவாளியான நீயும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க, நாம் இருவரும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் இனாமுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.