Skip to main content

சிறுமி ஆணவக் கொலையா? சேலம் அருகே பயங்கரம்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Salem girl child passed away police investigation

 

சேலம் அருகே, 17 வயது சிறுமியை பெற்றோரே ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கூறி, அவளுடைய காதலனின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயது மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (27) என்பவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். செப். 19ம் தேதி, சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சம்பத் அழைத்துச் சென்றுள்ளார். 

 

ஆனால், சம்பத் தன் மகளை மயக்கிக் கடத்திச்சென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர், காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சம்பத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். இந்நிலையில், சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி இரவு, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

அன்று இரவு சேமலாவின் கணவர் அறிவழகனும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். திங்கள்கிழமை (செப். 26) காலை வீட்டிற்கு வந்த அறிவழகன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறி சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். 

 

அப்போது, சிறுமியின் காதலனான சம்பத்தின் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் திடீரென்று சடலத்தை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு விருப்பம் இல்லாத இடத்தில் அவளை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவள் சம்மதிக்காததால் மகள் என்றும் பாராமல் பெற்றோரே ஆணவக் கொலை செய்துவிட்டு, தாயாரும் தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டினர். 

 

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டி.எஸ்.பி ஸ்வேதா தலைமையில் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடற்கூராய்வு செய்த பிறகு அவள் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவரும். அதன்படி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.