Skip to main content

ஓ....பட்டர்பிளை....பட்டர்பிளை....! சேலம் வனப்பகுதிகளில் அரிய வகை பட்டாம்பூச்சிகள்! ஆய்வில் தகவல்!!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

மழைவளம் பெருக, வனவளம் காப்பது இன்றியமையாததாகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, ஒவ்வொரு மாநிலத்தின மொத்த புவிப்பரப்பளவில் 33.33 சதவீதம் வனப்பரப்பளவு இருக்க வேண்டும் என்கிறது 1988ம் ஆண்டின் தேசிய வனச்சட்டம். மேலும் வனம் என்பது உயிர்ப்பன்மைத்துவம் மிக்க இடமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு இன்றைக்கு கடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டன.


உயிர்ப்பன்மைத்துவத்தின் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு வனத்துறை, அவ்வப்போது வனவிலங்குகள், பறவையினங்கள், பூச்சியினங்களை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. சேலம் வனத்துறையிலும் அண்மையில் அவ்வாறு ஒரு கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. சேலம் வனக்கோட்டத்தில் தம்மம்பட்டி, ஆத்தூர், கல்வராயன் மலை, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட 9 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், கரடி, நரி, காட்டு மாடுகள் மற்றும் சில அரிய வகை பறவைகளும் உள்ளன. 

salem forest area butterfly increase forest officers said that

இம்மாவட்ட வனப்பகுதிகளில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்புப் பணிகள் பிப். 14ம் தேதி முதல் தொடங்கின. மூன்று நாள்கள் இப்பணிகள் நடந்தன. வனப்பணியாளர்கள் மட்டுமின்றி 150 தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இக்குழுவினர், 17 பிரிவுகளாக பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். நவீன கேமராக்கள், பைனாகுலர் உபகரணங்களும் இப்பணியில் பயன்படுத்தப்பட்டன.


கணக்கெடுப்பு பணிகள் குறித்த அறிக்கை, வனத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். 


''சேலம் வனப்பகுதியில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் இரண்டாவது முறையாக அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2018ம் ஆண்டு இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த முறை நடந்த கணக்கெடுப்பில் சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் 276 வகையான பறவை இனங்கள், 76 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. 

salem forest area butterfly increase forest officers said that

நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 214 பறவை இனங்களும், 136 பட்டாம்பூச்சி இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. பறவை இனத்தில் புதிதாக ஒயிட்ரம்ப்டு ஸ்பைன்டேல் என்ற இனம் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வகை பறவைகள் கூட்டம் கூட்டமாக இருந்தன. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. 


அதேபோல் பட்டாம்பூச்சி இனங்களில் சாக்லெட் ஆல்பெட்ரோஸ், பேல்போர்லைன் புளூ, காமன் டின்செல், டிரான்ஸ்பரன்ட் சிக்ஸ் லைன் புளூ ஆகிய நான்கு இனங்கள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் எட்டுக்கும் மேற்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி இனங்களும் இருக்கின்றன. காமன் டின்செல் இன பட்டாம்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் இருக்கின்றன. இப்போது சேலம் மாவட்ட வனப்பகுதிகளிலும் அவை வந்திருப்பது சிறப்புக்குரியது,'' என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.