ADVERTISEMENT

நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை! சேலம் அருகே பயங்கரம்!

07:59 AM Jun 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, நிலத்தகராறில் விவசாயியைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் அடித்துக் கொலை செய்தனர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சின்னசோரகையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (வயது 55). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாள் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டாக நிலத்தகராறு இருந்து வந்தது.

கடந்த ஏப்ரல் 3- ஆம் தேதி காலை, பொன்னுவேலிடம் பெருமாள் மற்றும் அவருடைய மனைவி நாகம்மாள், மகன் பார்த்திபன் ஆகியோர் நிலப்பிரச்னை தொடர்பாக தகராற்றில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொன்னுவேலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவல் அறிந்த நங்கவள்ளி காவல்நிலைய காவல்துறையினர், விசாரணை நடத்தி, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். பொன்னுவேலை அடித்துக் கொல்ல முயன்றதாக பெருமாள், நாகம்மாள், பார்த்திபன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, பொன்னுவேலின் உடல்நிலைக் கவலைக்கிடமானதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் ஜூன் 13- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, ஜூன் 14- ஆம் தேதி, காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றினர். இது ஒருபுறம் இருக்க, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெருமாள், நிபந்தனை ஜாமினில் விடுதலை ஆனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT