Skip to main content

சேலத்தில் தகுதிச்சான்று இல்லாத 7 ஆட்டோக்கள் பறிமுதல்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சேலத்தில் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், ஆட்டோ, ஆம்னி கார்களின் தரம் குறித்து வாகன போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினர் அடிக்கடி கூட்டுத்தணிக்கை நடத்தி வருகின்றனர். விபத்துகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர். இந்நிலையில், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மாநகர காவல்துறையினர் இணைந்து சேலத்தில் ஆட்டோ உள்ளிட்ட இதர வாகனங்களை ஜூலை 25ம் தேதி ஆய்வு செய்தனர். மொத்தம் 62 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

 

SALEM DISTRICTS WITHOUT DOCUMENT AUTO SEIZURE OFFICERS

 

 


மேலும், 7 ஆட்டோ, 3 இதர வாகனங்கள் உள்பட பத்து வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. விதிகளை மீறிய குற்றத்திற்காக 4500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சரியான விதிகளை பின்பற்றாத சில வாகன உரிமையாளர்களுக்கு 21500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை பின்னர் வசூலிக்கப்படும். அதிகாரிகளின் அதிரடி சோதனையால் விதிகளை மீறி இயக்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.