Skip to main content

சேலம்: வாகனங்களுக்கு அடிக்கடி தீ வைக்கும் ரவுடிக்கு 'குண்டாஸ்'!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

சேலம் கோட்டை முகமது காசிம் தெருவைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா. இவருடைய மகன் சலீம் என்கிற சலீம் பாஷா (30). கடந்த 2018ம் ஆண்டு, சலீம்பாஷா அவருடைய கூட்டாளி வாசிம் அக்ரம் என்பவருடன் சேர்ந்து, சின்னசாமி தெருவைச் சேர்ந்த சீனி சந்தோஷ் என்பவரை செங்கல் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக வந்த புகாரின்பேரில், சேலம் நகர காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

salem district two wheeler illegal person goondas act arrested police action

ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்த அவர்கள், பழைய விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம், சீனி சந்தோஷூக்குச் சொந்தமான 6 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.


அதன்பிறகு, மீண்டும் ஜாமினில் விடுதலையான சலீம்பாஷா, கூட்டாளி ரஹ்மான் என்பவருடன் சேர்ந்து 9.7.2019ம் தேதியன்று, கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்த கபீர் முகமது என்பவருடைய வீட்டு வாசல் கதவுக்கு தீ வைத்தார். இந்த வழக்கிலும் கைதாகி மீண்டும் வெளியே வந்த சலீம், 12.1.2020ம் தேதி ரியாசுதீன் என்பவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். 


தொடர்ந்து சைக்கோபோல வாகனங்களை தீ வைத்து எரித்தல் மற்றும் வழிப்போக்கர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சலீம் என்கிற சலீம்பாஷாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சலீம் பாஷா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சலீம்பாஷாவிடம் ஜன. 28ம் தேதி சார்வு செய்யப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.