Skip to main content

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்; 10 பேர் அதிரடி கைது!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 


சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின், தேர்த்திருவிழா கடந்த மூன்று நாள்களாக வெகு விமர்சையாக நடந்தது. திங்களன்று (பிப். 10) இறுதி நாள் தேர் ஊர்வலம் வந்தது. மாலை 06.00 மணியளவில் தேர், கோயில் திடல் அருகே நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

salem district tharamangalam kailasanathar temple incident police

அதையடுத்து, தேரில் இருந்து சாமியை இறக்கி வைத்தனர். இரவு 08.30 மணியளவில், தேரை இழுத்து வந்த இளைஞர்கள் மேளதாளம் முழங்க கோயிலை மூன்று சுற்று சுற்றி வந்தனர். அப்போது இளைஞர் ஒருவர், 'நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் ஆடுகிறீர்கள்? நீங்கள் தேர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தால், தனியாக நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியதுதானே?,' என்று வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பார்த்து கேட்டார். இதை எதிர்பார்க்காத அந்த தரப்பு இளைஞர், ஆத்திரம் அடைந்தார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து பேசிய இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்தார்.


தாக்கப்பட்ட வாலிபர், தனது நண்பர்களை ஒருங்கிணைத்தார். ரவி என்பவர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோயில் அருகே திரண்டனர். பதிலுக்கு, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் ஆள்களை அழைத்து கோயில் திடல் அருகே வரச் செய்தார். இதையடுத்து இரண்டு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் அசாதாரண நிலை உருவானது. 


இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். முதல்கட்டமாக இந்த மோதலில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே சாதி மோதலாக வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. செவ்வாயன்றும் தாரமங்கலம் கோயில் சுற்றுவட்டாரத்தில் பதற்றமான சூழலே நிலவியது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.