Skip to main content

சேலத்தில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

Published on 15/11/2020 | Edited on 15/11/2020

 

salem district tasmac officer vigilance officers raid money seized

சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபானக் கிடங்கு உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளராக அம்பாயிரம் பணியாற்றி வருகிறார். இங்கிருந்துதான் சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபான ஆலை பிரதிநிதிகள், டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பணமாகவும், பட்டாசு, இனிப்புகளாகவும் அன்பளிப்புகள் பெறப்படுவதாக புகார்கள் சென்றன.

 

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல்துறையினர் நவ. 13- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், டாஸ்மாக் கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது கவர்களில் பணம் மற்றும் ஏராளமான பட்டாசு கிப்ட் பாக்சுகள் இருப்பது தெரிய வந்தது.

 

அவற்றை கொடுத்தது நபர்கள் யார் யார்? அல்லது கொள்முதல் செய்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கேட்டபோது ஊழியர்களிடம் இருந்து முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த சோதனையில் அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்து கணக்கில் வராத 1.21 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.