Skip to main content

சேலத்தில் சனிக்கிழமைகளில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

 

salem district saturday coronavirus prevention camp corporation

 

சேலத்தில், சனிக்கிழமைதோறும் கரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

சேலம் மாநகராட்சி நிர்வாகம், கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த நவ. 28- ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கரோனா பரிசோதனைக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை, காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தி வருகிறது.

 

இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் நடக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் 5- ஆம் தேதி (சனிக்கிழமை) அம்மாபேட்டை மண்டலம் 9- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு அல்லிக்குட்டை, தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 6- வது வார்டு மக்களுக்கு காந்தி நகர் ஐசிடிஎஸ் பகுதியில் உள்ள சித்த மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு ஜாகிர் காமிநாயக்கன்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும். 

 

டிச. 12- ஆம் தேதி, கொண்டலாம்பட்டி மண்டலம் 54- வது வார்டு மக்களுக்கு சண்முகா நகர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமும்; அம்மாபேட்டை மண்டலம் 42- வது வார்டு மக்களுக்கு காசிலட்சுமி கல்யாண மண்டபத்தில் சித்த மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 5- வது வார்டு மக்களுக்கு பெரிய புதூர், குமரன் நகர் அருணகிரி மெட்ரிக் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

 

டிச. 19- ஆம் தேதி, சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு காமிநாயக்கன்பட்டி பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 45- வது வார்டு மக்களுக்கு எஸ்எம்சி லைன் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவ முகாமும், அம்மாபேட்டை மண்டலம் 10- வது வர்டு மக்களுக்கு புத்து மாரியம்மன் கோயில் தெரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

 

டிச. 26- ஆம் தேதி, அஸ்தம்பட்டி மண்டலம் 7- வது வார்டு மக்களுக்கு நாகப்பன் முதன்மை சாலை அய்யன்துரை மாளிகையில் மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 2- வது வார்டு மக்களுக்கு பெரியம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஐசிடிஎஸ் மையத்தில் சித்த மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 51- வது வார்டு மக்களுக்கு ரங்காபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது" இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.