போக்சோ நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா!

salem district pocso court judge test for positive in covid 19

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக முருகானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சில நாள்களாக காய்ச்சல், உடல்வலி இருந்து வந்தது. மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இவர் உள்பட சேலம் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மேலும் இரண்டு ஊழியர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

coronavirus Judge positive Salem
இதையும் படியுங்கள்
Subscribe