Skip to main content

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

மேட்டூர் அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற வழக்கில், ஏழு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மேட்டூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 
 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொதியம்பட்டி காட்டுவளவைச் சேர்ந்தவர் பெருமாள் (34). கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி முத்தாள் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (37) என்பவருக்கும் திருமண உறவுக்கு வெளியே 'நெருக்கமான தொடர்பு' இருந்து வந்தது. இதையறிந்த பெருமாள், இந்த தொடர்பை உடனடியாக கைவிடுமாறு இருவரையும் எச்சரித்தார். 


கடந்த 2014ம் ஆண்டு செப். 18ம் தேதி இரவு, பொதியம்பட்டி அருகே உள்ள கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள், அவருடைய அண்ணன் மகன் மோகன், உறவினர்கள் கணேசன், மாதையன் ஆகிய நான்கு பேரும், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். 
 

salem district mettur employee incident court judgment


முத்தாளுடனான தொடர்பை விட்டு விலகுமாறு அடிக்கடி மிரட்டி வந்ததால் பெருமாளை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று மூர்த்தி முன்பே தீர்மானித்து இருந்த மூர்த்தி, அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில்தான், கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவர், தனது கூட்டாளிகள் கணேசன் (23), செம்பட்டையன் என்கிற தம்மண்ணன் (23), பெருமாள் (34), நாகராஜ் (26), அருண்குமார் (26), பொம்மநாயக்கர் (46) ஆகிய ஏழு பேருடன் சேர்ந்து வழிமறித்தார். 


பெருமாளுடன் வந்த கணேசன், மாதையன் ஆகியோரை மூர்த்தியின் கூட்டாளிகள் சிலர் பிடித்துக் கொண்டனர். மேலும், பெருமாள், மோகன் ஆகியோரை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள், நிகழ்விடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த மோகனை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. 


இதுகுறித்து, மேச்சேரி காவல்நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தி உள்ளிட்ட கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் கைது செய்தனர். 


இந்த வழக்கின் விசாரணை, மேட்டூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், திங்கள்கிழமை (நவ. 11, 2019) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு அளித்தார்.


குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான மூர்த்தி உள்ளிட்ட ஏழு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், மூர்த்தி, கணேசன், செம்பட்டையன், பெருமாள் ஆகிய நால்வருக்கும் தலா 7500 ரூபாய் அபராதமும், நாகராஜன், அருண்குமார், பொம்மநாயக்கர் ஆகியோருக்கு தலா 6500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.