காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (24/09/2019) மீண்டும் எட்டியுள்ளது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,097 கன அடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகஅணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.