சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (31/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,683 கனஅடியில் இருந்து 8,271 கனஅடியாகஅதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.10 அடியாகவும், நீர் இருப்பு 64.97 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்குகால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.