/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur (1)_11.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று (30/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,145 கனஅடியிலிருந்து 6,603 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.55 அடியாகவும், நீர் இருப்பு 60.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியிலிருந்து 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)