மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று (29/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்குநீர்வரத்து வினாடிக்கு 4,427 கனஅடியில் இருந்து 5,145 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 96.95 அடியாகவும், நீர் இருப்பு 60.95 டி.எம்.சி. யாகவும் இருக்கிறது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு வினாடிக்கு 20,000 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.