/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam2222 (1)_3.jpg)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (04/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,937 கன அடியில் இருந்து 21,339 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.36 அடியாகவும், நீர் இருப்பு 53.06 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)