Published on 31/08/2020 | Edited on 31/08/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இன்று (31/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,839 கன அடியில் இருந்து 4,144 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.71 அடியாகவும், நீர்இருப்பு 53.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 16,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 800 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.