Skip to main content

ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு! சேலம் மாவட்டத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி? 

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

salem district lockdown relaxation collector announced


கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 24- ஆம் மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பிறகு மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மே 31- ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
 


எனினும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. இத்தடை உத்தரவு காலத்தில் பொதுவெளியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகள், அரசு வழங்கியுள்ள விதிமுறைகள், தளர்வுகளால் இயக்கப்படும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவு தற்போது மே 31- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். 

தடை உத்தரவு பொருந்தும் நிறுவனங்கள், கடைகள் விவரம்:

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் திறக்கப்படக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சள் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் செயல்படத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகையான சமய, சமுதாயக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீடிக்கிறது.

பொதுமக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரில் இருந்து பிற பகுதிளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, மின்சார ரயில்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகளைத் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி இல்லை. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்குத் தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும். 

 

 


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் விவரம்:

ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும். சேலம் மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.
 

 

salem district lockdown relaxation collector announced


சேலம் மாவட்டத்திற்குத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?:

சேலம் மாவட்டத்திற்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்கத் தளர்வு அளிக்கப்படுகிறது. 

சேலம் மாவட்டத்திற்குள் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறை தொடரும். 

அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசியப் பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதைக் கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் & தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாகப் பணியாற்றும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுகிறது. 
 

http://onelink.to/nknapp


ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசியப் பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது. 

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற விலக்களிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவும் நடைமுறையைப் பின்பற்றி, போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்திட வேண்டும். 

பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றுவதை உறுதி செய்வதோடு, அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பட்டு நடைமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதோடு, ஊரடங்கு உத்தரவு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இந்நோய்ப் பரவாமல் தடுத்திட, தமிழ்நாடு அரசு மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து தமிழ்நாடு அரசுக்கும், சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் காவல்துறைக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.