Skip to main content

வாக்களிக்க வந்த இளம்பெண்ணின் குழந்தையை மடியில் வைத்து தாலாட்டு பாடிய ஊர்க்காவல் படை பெண் கமாண்டர்!

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

சேலம் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 30, 2019ம் தேதி நடந்தது. ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 

salem district local body election voters police


அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணிசமான வாக்காளர்களுக்கு உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களை ஒருங்கமைக்கும் பணிகளில் காவல்துறையினருடன் ஊர்க்காவல்படை (ஹோம் கார்டு) காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

salem district local body election voters police


உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஒன்றில், சேலம் ஊர்க்காவல் படையில் பெண்கள் பிரிவு கமாண்டராக பணியாற்றி வரும் ஜெயலட்சுமி (39) என்பவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்களை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்களிப்பதற்கான உதவிகளைச் செய்து கொடுத்தார்.

salem district local body election voters police


இந்நிலையில், காயத்ரி என்ற இளம்பெண், பால் மணம் மாறாத கைக்குழந்தையுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார். அவருக்கு முன்பும் சில வயதான பெண்கள் வரிசையில் நின்றதால், அவர்கள் வாக்களித்துவிட்டு வரும் வரை காயத்ரியும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். பின்னர் அவர் வாக்களிக்கச் செல்லும்போது அவரிடம் இருந்த கைக்குழந்தையை பத்திரமாக வைத்திருப்பதாகக்கூறி, ஊர்க்காவல் படை பெண் கமாண்டர் ஜெயலட்சுமி பெற்றுக்கொண்டார்.


அவர் அக்குழந்தையை தனது மடியில் வைத்துக்கொண்டு தாலாட்டு பாடினார். குழந்தை அழாமல் இருக்க அதற்கு, வாக்களிக்க வந்த மக்களை காண்பித்து வேடிக்கை காட்டினார். குழந்தையின் தாய் வாக்களித்துவிட்டு வரும் வரை மட்டுமின்றி, அவர் வந்த பின்னரும்கூட அந்தக்குழந்தையை பிரிய மனமில்லாமல் சிறிது நேரம் தூக்கி வைத்துக் கொஞ்சினார் ஜெயலட்சுமி. இந்தக் காட்சியைப் பார்த்த வாக்களிக்க வந்த பெண்கள் ஜெயலட்சுமியின் தாய்மை உணர்வைப் பாராட்டினர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.